ஏனென்றால் புற்றுநோய் என்பது எச்சரிக்கை இன்றி வரலாம்
ஏனென்றால் புற்றுநோய் என்பது எச்சரிக்கை இன்றி வரலாம்
சிறு நோய்களையும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பெரு நோய்களையும் நம்மில் பலர் எப்படியாவது சகித்துக்கொள்கிறோம், ஆனால் 'புற்றுநோய்' என்று சொன்னாலே மிக உறுதியானவர்கள் கூட ஆட்டங்கண்டு விடுகிறார்கள். உடனே நமது கற்பனை பெருந்துன்பம் நோக்கிச் செல்கிறது.
புற்றுநோயை வெல்வதில் அதற்கேயுரிய கஷ்டநஷ்டங்கள் உண்டு, என்றாலும் இந்நோய்க்குச் சிகிச்சையளிக்க மிகுந்த செலவாகும். பல புற்று நோயாளிகள் இந்நோய் சார்ந்த உயர் மருத்துவச் செலவுகளால் மட்டுமின்றி, வருமானம் குறைதல், பயணச் செலவுகள் கூடுதல் போன்றவற்றைச் சமாளிப்பதற்கும் கடன்பட்டு விடுகிறார்கள். பிறர் சிகிச்சையை தள்ளிப்போட நேரிடலாம் – இது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்த முடியும். இதைவிட மோசமானது என்னவென்றால், புற்றுநோய் பல சமயம் எச்சரிக்கையின்றி வருவதால், தயாராவதற்கு அவகாசம் கிடைப்பதில்லை.
என்றாலும், நிதி ரீதியாக புற்றுநோயை வெல்வது சாத்தியமே!
நவீன மருத்துவத்தில் புற்றுநோயை குணப்படுத்த வழிகள் உள்ளன, எனினும் புற்றுநோயை முறியடிப்பதற்கு நிதி ஆதாரங்கள் தேவை. முழுமையான புற்றுநோய் காப்பீட்டுத் திட்டத்தைப் பெறுவதன் மூலம் புற்றுநோயின் நிதிப் பின்விளைவுகளைச் சமாளிக்க முடியும்.
பாலிசிதாரர்கள் முழுமொத்தத் தொகைகளைப் பெற்று அதன்மூலம் உரிய காலத்தில் உயர்தர மருத்துவக் கவனிப்புப் பெறும் வகையில் புற்றுநோய் காப்பீட்டுத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிகிச்சைச் செலவை உட்படுத்தும் வகையில் பலன் தொகை தெரிவுகளும் உள்ளன. இந்தத் தொகைகள், ஏற்படுகின்ற செலவுகளைப் பொறுத்து அமைவதில்லை என்பதால், புற்றுநோய் காப்பீட்டுப் பாலிச மூலம் நோயறிதல் பரிசோதனைகள் முதல் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சை மற்றும் மருந்துகள் வரை இந்நோயை முறியடிக்க வடிவமைக்கப்பட்ட பல்வேறு சிகிச்சைத் திட்டங்களுக்கு நிதியளிக்க முடியும். முழுமொத்தத் தொகையை பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறை அல்லது மாற்றுச் சிகிச்சைக்கும் திட்டமிடாத செலவுகளுக்கும் வேறு வடிவிலான சிகிச்சைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், மேம்பட்ட சிகிச்சைக்காக வேறு நகரம்/நாட்டுக்குப் பயணிப்பதற்கும் இதைப் பயன்படுத்தலாம். சிறந்த சிகிச்சைக்காக வேறு நகரம்/நாட்டிற்குச் செல்லவும் இதைப் பயன்படுத்தலாம். இதனால், இது புற்றுநோய்ச் சிகிச்சையின் நிதி அம்சங்களைச் சமாளிக்க ஒரு முக்கியமான பாதுகாப்பு அரணை வழங்கி, காப்பீடு பெற்றவர் சிகிச்சை பெற்று தேறுவதில் கவனம் செலுத்த போதிய நேரத்தை வழங்குகிறது.
புற்றுநோய் பாலிசி உங்களுக்கு எப்படி உதவும்
நல்ல தரமான சிகிச்சையைப் பெற்றால் புற்றுநோயை வெல்வது சாத்தியமே. ஆனால் அந்த நேரத்தில் போதிய நிதி ஆதாரம் இல்லாவிட்டால், சிகிச்சைத் தாமதம் ஏற்பட்டு புற்றுநோய் வேகமாக மோசமடையலாம். அதுபோன்ற சமயத்தில், உங்களுக்கு ஆதரவாக ஒரு புற்றுநோய் காப்பீட்டுப் பாலிசி இருந்தால், உடனே பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சையை தொடங்கி, வெகு விரைவாக குணமடையும் பாதையில் செல்லலாம். புற்றுநோய் காப்பீட்டுப் பாலிசிகள் புற்றுநோயினால் ஏற்படும் நிலையற்ற நிதிச் சூழ்நிலையிலிருந்து உங்களைக் காக்க முடியும்.
- மருத்துவ பரிசோதனை இல்லாமல் எளிமையான சேர்க்கை செயல்முறை
- நோய் தீவிரமடையும் போது நிலை வாரியாக மொத்த தொகை செலுத்துதல்
- உண்மையான மருத்துவச் செலவுகளைப் பொருட்படுத்தாமல் செலுத்துதல்கள்
- நிலையான மாதாந்திர கொடுப்பனவு நிலையான மாதாந்திர கொடுப்பனவுக்கான விருப்பம்
- பிரீமியம் தள்ளுபடி பலன்
- கோரிக்கைகளுக்கு மருத்துவ பில்கள் தேவையில்லை.
- திட்டத்தை மலிவு விலையில் வழங்க நியாயமான பிரீமியங்கள்
- திட்டத்தை ஆன்லைனில் வாங்குவதற்கான விருப்பம்
- இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரிச் சட்டங்களின்படி வருமான வரிச் சலுகைகள்/விலக்குகள்
யாரெல்லாம் புற்றுநோய் காப்பீட்டை வாங்கலாம்?
இந்தக் கேள்விக்கான பதில்: எல்லோருமே. எவருக்கும் புற்றுநோய் ஏற்படலாம் என, பல்லாண்டுகால ஆய்வுகள் பல காட்டுகின்றன. பபுகைபிடித்தல்/குடிப்பழக்கம்/வாழ்க்கைமுறை போன்ற சில காரணிகள் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கலாம் என்றபோதிலும், பாரபட்சமின்றி புற்றுநோய் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். இந்நோய்க்குச் சிகிச்சையளிப்பது மிகக் கடினம், மிகுந்த செலவை ஏற்படுத்தும். எனவே, இந்நோயின் நிதிப் பின்விளைவுகளைச் சமாளிக்கப் போதிய வளம் இல்லாதவர்கள் நிச்சயமாக புற்றுநோய் காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.