How to Get Out of Debt
7 நிமிடங்கள் படித்தது
நிதி

கடனிலிருந்து விடுபடுவது எப்படி? – பலனளிக்கும் 5 உத்திகள்

கடனிலிருந்து விடுபடுவது எப்படி? – பலனளிக்கும் 5 உத்திகள்

கடனிலிருந்து விடுபடுவது எப்படி? – பலனளிக்கும் 5 உத்திகள்

எவருடைய நிதி அறிக்கை அல்லது நிதி நிலையை கவனித்தாலும், அவருக்கு ஏதாவது ஓர் அளவில் கடன் இருக்கும் என்பது புரியும். வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தனிநபர் கடன், கார் கடன், வீட்டுக் கடன், விடுமுறைக் கடன் எனச் சகலவிதக் கடன்களையும் குறைந்த விகிதத்தில் வழங்கி மக்களை ஈர்த்து கடன் வாங்கத் தூண்டுகிறார்கள். மக்கள் கடனை அடைப்பதில் உள்ள சிரமங்கள் பற்றி யோசிக்காமல் கடன்களைப் பெற முனைகின்றனர். அது மட்டுமல்ல, மக்கள் தங்கள் வருமானத்தைப் பற்றி யோசிக்காமல், தவணை முறையில் உபகரணங்களை வாங்குவது, ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பெறுவது போன்றவற்றின் பால் ஈர்க்கப்படுகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், உங்கள் வரவை விட செலவு அதிகமாக இருப்பின், அது கடன் சூழ்நிலைக்கு வழிவகுக்கும். நீங்கள் வருமானத்தை விட அதிகமாகச் செலவு செய்பவராக இருந்தாலும் அல்லது அளவுக்கதிகமான கிரெடிட் கார்டு பேமென்ட் அல்லது கடன் வட்டி பேமென்ட்களின் சுமை கொண்டிருந்தாலும் இது நிகழும். கவலைப்படாதீர், நீங்கள் மட்டுமல்ல, மேலும் பலர் இதுபோன்ற சூழ்நிலைகளில் சிக்கியுள்ளனர். நீங்கள் பாக்கியை அல்லது கடனை அடைக்க வேண்டியிருந்தால், 2025இல் கடனிலிருந்து விடுபட்டு நிதிச் சுதந்திரம் பெற இதோ சில வழிமுறைகள்.

#1: குறைந்தபட்ச பாக்கித் தொகையை விட அதிகமாகச் செலுத்துங்கள்:

#1: குறைந்தபட்ச பாக்கித் தொகையை விட அதிகமாகச் செலுத்துங்கள்:

கடன் அடைப்பு அல்லது கிரெடிட் கார்டு பேமென்ட் செலுத்தும்போது எப்படிக் கடனிலிருந்து விடுபடுவது என யோசிக்கிறீர்களா? மாதந்தோறும் குறைந்தபட்ச பாக்கித் தொகையை விட அதிகமாகச் செலுத்துவது சிறந்த வழி. இதன் மூலம், ஒவ்வொரு மாதமும் அதிக நெருக்கடி இல்லாத வகையில் குறைந்தபட்ச வரம்பை விட சற்று அதிகமாகச் செலுத்த முடியும். அதேவேளை, நீங்கள் சற்று அதிகமாகச் செலுத்துவதால், பாக்கி அசல் தொகை குறையும், ஆக அடுத்த சுழற்சியில் செலுத்தவேண்டிய குறைந்தபட்சத் தொகையும் குறையும்.

#2: உங்கள் கடன்களை ஒருமுகப்படுத்துங்கள்:

#2: உங்கள் கடன்களை ஒருமுகப்படுத்துங்கள்:

2025இல் எப்படிக் கடனிலிருந்து விடுபடுவது என்பதற்கு ஒரு மிகச்சிறந்த தீர்வு, உங்கள் கடனை ஒருமுகப்படுத்துதல். 2 முதல் 3 தனிநபர் கடன்களுக்கு தவணை செலுத்துவதற்குப் பதிலாக, ஒரு கடனை எடுத்து சிறு கடன்களை அடைத்துவிடுங்கள். இதன் மூலம், ஒவ்வொரு கடனையும் தனித்தனியாகக் கவனிக்கும் சுமை இருக்காது.

#3: குறைந்த கடன் விகிதங்களைப் பெறுங்கள்:

#3: குறைந்த கடன் விகிதங்களைப் பெறுங்கள்:

கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதம் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கும், ஏனென்றால் அவை நாட்டின் பொருளாதார நிலை, நிதி வரத்து, சந்தை நிலைமைகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. எனவே, வட்டி விகிதம் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கும். இது குறித்து கவனித்து வருவது சிறந்தது, ஏனென்றால் வட்டி விகிதம் குறையும்போது குறைந்த விகிதக் கடனைப் பெற்று பழைய கடன்களை அடைத்துவிடலாம். இது பணத்தை மிச்சப்படுத்தி கடன் வலையிலிருந்து வெளியேற ஒரு சாதுரியமான வழி.

# 4: செலவுகளைக் கண்காணித்து வாருங்கள்:

# 4: செலவுகளைக் கண்காணித்து வாருங்கள்:

திடீரென்று வருமானத்தைக் கூட்டுவது எளிதல்ல, எனினும் நிதி வெளியேறுவதை நீங்கள் கட்டுப்படுத்தலாம், இதன்மூலம் உங்கள் வருமானக் கையிருப்பு அதிகரித்து கடனை விரைவாக அடைக்க முடியும்.

#5: உரிய நேரத்தில் செலுத்துங்கள்:

#5: உரிய நேரத்தில் செலுத்துங்கள்:

உங்கள் கார்டு பில்கள், கடன் ஆகியவற்றுக்கு உரிய நேரத்தில் பாக்கியை செலுத்துங்கள், ஏனென்றால் தாமதிப்பதால் அபராதம் விதிக்கப்பட்டு கடன் தொகை அதிகரிக்கும்.

முடிவு: எனவே, 2025லேயே கடனிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்று யோசிக்கிறீரா? இந்த 5 வழிமுறைகளைப் பின்பற்றி அதன் பலன்களைப் பாருங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

முதல் படி உங்கள் நிதி நிலைமையை மதிப்பிடுவது, நிலுவையில் உள்ள அனைத்து கடன்களையும் பட்டியலிடுவது மற்றும் திருப்பிச் செலுத்தும் திட்டத்தை உருவாக்குவது. குறைந்தபட்ச திருப்பிச் செலுத்தும் தொகையை விட அதிகமாக செலுத்துவது கடன் வசூலை விரைவுபடுத்தும்.

கடன் ஒருங்கிணைப்பு பல கடன்களை ஒரே கடனாக இணைக்கிறது, பெரும்பாலும் குறைந்த வட்டி விகிதத்தில். இது திருப்பிச் செலுத்துவதை எளிதாக்குகிறது மற்றும் உங்கள் ஒட்டுமொத்த நிதிச் சுமையைக் குறைக்கும்.

பட்ஜெட் திட்டமிடல் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது, மேலும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அதிக செலவழிக்கக்கூடிய வருமானத்தை உறுதி செய்கிறது.

ஆம், வட்டி விகிதங்களைக் கண்காணிப்பது உங்களுக்கு மறுநிதியளிப்பு அல்லது மலிவான விகிதங்களைக் கொண்ட கடன்களுக்கு மாற உதவுகிறது, பணத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் உங்கள் திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவைக் குறைக்கிறது.

அனைத்தையும் காண்க

சம்பந்தப்பட்ட கட்டுரைகள்