Protect Your Family’s Future This Father’s Day
14 நிமிட வாசிப்பு
வாழ்க்கை யுக்திகள்

இந்த தந்தையர் தினத்தில் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாத்திடுங்கள்

இந்த தந்தையர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பாதுகாப்பு என்ற பரிசை வழங்குங்கள்

இந்த தந்தையர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பாதுகாப்பு என்ற பரிசை வழங்குங்கள்

தந்தை என்ற வகையில், குடும்ப அத்தியாவசியங்களைத் தாண்டி மேலும் பலவற்றுக்கு உங்கள் பங்கு முக்கியம். வேலை இழப்பு, சுகாதாரப் பிரச்சனை, குழந்தையின் கல்வித் திட்டம் எனப் பல சவால்கள் எழும்போது நீங்களே நிலையான ஆதரவாக இருக்கிறீர்கள். கஷ்ட காலங்களில் உங்கள் வாழ்க்கைத் துணைவி உங்களிடமிருந்து தைரியம் பெறுகிறார், மேலும் உங்கள் குழந்தைகள் ஆறுதல், ஸ்திரத்தன்மை மற்றும் வழிகாட்டலுக்கு உங்களையே சார்ந்து இருக்கிறார்கள். வாழ்க்கை எச்சரிக்கையின்றி திரும்பும், எனவே ஒவ்வொரு திருப்பத்திலும் உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. இந்த 2025 தந்தையர் தினத்தில், உங்கள் குடும்பத்திற்கு ஓர் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை பரிசாக அளித்து, நீங்கள் இல்லாதபோதும் அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யுங்கள்.

தந்தையர் தின பரிசாக வரும் ஆயுள் காப்பீடு உங்கள் குடும்பத்தை எவ்வாறு பாதுகாக்கும்?

தந்தையர் தின பரிசாக வரும் ஆயுள் காப்பீடு உங்கள் குடும்பத்தை எவ்வாறு பாதுகாக்கும்?

உங்கள் குடும்பத்திற்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை பரிசளிப்பது ஏன் சிறந்த பரிசாக இருக்கும்:

மாற்று வருமானம்

மாற்று வருமானம்

ஒரு தந்தை என்ற வகையில், உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நீங்கள் சுமக்கிறீர்கள். ஆனால் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டால், உங்கள் வருமானம் இன்றி அவர்கள் எப்படிச் சமாளிப்பார்கள்? நீங்கள் இல்லாதபோது உங்கள் வாரிசுதாரருக்கு வழங்கப்படும் முழுமொத்தத் தொகை மூலம் ஆயுள் காப்பீடு கைகொடுக்கும். திட்டத்தைப் பொறுத்து, இது உங்கள் வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்காக அல்லது செலுத்திய பிரீமியம்களின் 105% அல்லது காப்பீட்டுத் தொகையாக இருக்கலாம். இந்தத் தொகையானது தினசரிச் செலவுகள், குழந்தைகளின் கல்வி மற்றும் பொறுப்புகளைச் சமாளிக்க உதவுகிறது, நீங்கள் இல்லாதபோதும் உங்கள் குடும்பம் நிதி ரீதியாக நிலையாக இருப்பதை உறுதிசெய்கிறது.

கடன் பாதுகாப்பு

கடன் பாதுகாப்பு

உங்கள் குடும்பத்திற்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க நீங்கள் வீட்டுக் கடன் , கல்விக் கடன் அல்லது வணிகக் கடன் வாங்கியிருக்கலாம். எனினும், அவற்றைத் திருப்பிச் செலுத்த நீங்கள் இல்லாத போது, இந்தக் கடன்கள் உங்கள் மனைவிக்கு அல்லது குழந்தைகளுக்கு ஒரு சுமையாக மாறக்கூடும். ஓர் ஆயுள் காப்பீட்டுப் பாலிசியில் கடன் பாக்கிகள் உட்படுவதால் அது உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கும். அது கடனின் முழுத் தொகையை அல்லது பகுதியளவை உட்படுத்தினாலும் சரி, உங்கள் அன்புக்குரியவர்கள் பாக்கிக் கடன்களால் தங்கள் வீடு, கார் அல்லது நிதி நிலைத்தன்மையை இழக்கும் ஆபத்தைத் தவிர்க்க காப்பீட்டுத் தொகை உதவுகிறது.

எதிர்காலப் பாதுகாப்பு

எதிர்காலப் பாதுகாப்பு

உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம், கல்லூரிப் படிப்பு, திருமணம், சில சமயம் ஒரு சிறிய வாரிசுச் சொத்து ஆகியவற்றை வழங்க நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள். ஆனால் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டால், இந்தக் கனவுகள் அனைத்தும் தகர்ந்துவிடும். ஆயுள் காப்பீடு ஒரு நிதிப் பாதுகாப்பு வேலியாகச் செயல்படுகிறது. பெரும்பாலும் நீண்டகால நோக்கத் தொகையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிற காப்பீட்டுத் தொகை உங்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும், எனவே உங்கள் குழந்தை தனது கல்வியை இடைநிறுத்தத் தேவையில்லை அல்லது உங்கள் மனைவி பெரிய வாழ்க்கைச் செலவுகளைக் கையாளச் சிரமப்பட வேண்டியதில்லை. குடும்பப் பிணைப்புகளும் எதிர்காலத் திட்டங்களும் மதிக்கப்படும் இந்தியாவில் 2025 தந்தையர் தினத்தன்று இந்த ஆதரவு ஒரு விலைமதிப்பற்றதாக உள்ளது.

அவரவருக்கு ஏற்ற காப்பீடு

அவரவருக்கு ஏற்ற காப்பீடு

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வெவ்வேறு தேவைகள் இருக்கும். ஆயுள் காப்பீடு உங்கள் குடும்பத்தின் நிதிக் குறிக்கோள்களுக்கு ஏற்ற திட்டத்தைத் தேர்வுசெய்ய உதவுகிறது. நீங்கள் லெவல் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்கலாம், அதில் காப்பீட்டுத் தொகை மாறாமல் இருக்கும், அல்லது ஆண்டுதோறும் 5% வளர்கிற இன்கிரீஸிங் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்கலாம். இது விலையுயர்வு மற்றும் எதிர்காலத் தேவைகளை கவனித்துக்கொள்ள உதவுகிறது. எனவே, உங்கள் குழந்தை 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டில் படிக்கவேண்டும் என விரும்பினால், ஓர் அதிகரிக்கும் காப்பீடு எடுக்கலாம், அவர்கள் வளர வளர அந்தப் பாலிசியும் வளரும், இதுவும் உங்கள் அன்புக்குரியவரின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் விவேகமான தந்தையர் தின நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கும்.

பாரபட்சமற்ற பகிர்வு

பாரபட்சமற்ற பகிர்வு

நீங்கள் சொத்து அல்லது பிற உடமைகளை விட்டுச்செல்லும் போது, சொத்துப் பகிர்வு சிக்கலடைந்து சர்ச்சைகள், தாமதங்கள், நீதிமன்றப் பிணக்குகள் ஆகியவற்றுக்கு வழிவகுக்கலாம். இது பெரும்பாலும் தெளிவற்ற உயில்கள், சட்டக் கோரிக்கைகள் அல்லது குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக நிகழ்கிறது. ஆயுள் காப்பீடு, வாரிசுதாரருக்கு நேரடியாகத் தொகையை வழங்கி இந்தப் பிரச்சனையைத் தீர்க்கிறது. இது உங்கள் உயிலைச் சாராமல் செயல்படும், அதாவது இதில் எந்த சட்டத் தடைகளும், கடன் வழங்குநர் கோரிக்கைகளும், குடும்பத் தலையீடும் இருக்காது. உங்கள் மனைவி, குழந்தை அல்லது பெற்றோருக்கு நீங்கள் வழங்கும் நிதிப் பரிசு நீங்கள் நினைத்தபடியே முழுமையாகவும் உடனடியாகவும் அவர்களைச் சென்றடைவதை இது உறுதிசெய்கிறது, இது தந்தையர் தினக் கொண்டாட்ட யோசனைகளில் ஓர் அர்த்தமுள்ள தெரிவு.

பிரீமியம் நெகிழ்வுத்தன்மை

பிரீமியம் நெகிழ்வுத்தன்மை

உங்கள் பிரீமியம்களை செலுத்தும் முறையை நீங்களே தேர்வுசெய்யலாம்: அது தொடர்ந்து பாலிசி காலம் முழுவதும் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அல்லது ஒருமுறை மட்டுமே என இருக்கலாம். ஒற்றைப் பிரீமியம் என்பதில் முழு கால காப்பீட்டிற்காக ஒருமுறை மட்டுமே பணம் செலுத்தப்படும். வழக்கமான பிரீமியம்கள் பல ஆண்டுளினூடே பரவி, உங்கள் மாதாந்திர பட்ஜெட்டை நிர்வகிக்க உதவும். வரையறுக்கப்பட்ட பிரீமியம் திட்டங்களில் நீங்கள் நீண்டகால காப்பீட்டை அனுபவித்துக் கொண்டே ஒரு குறுகிய காலத்திற்கு பணம் செலுத்தலாம். சில பாலிசிகளில், பாலிசி காலத்திற்குப் பிறகும் நீங்கள் உயிர்வாழ்ந்தால் செலுத்திய பிரீமியம்கள் திருப்பித் தரப்படும், இது இளம் தந்தைமார்கள் மன நிம்மதி நாடி தந்தையர் தினப் பரிசில் சேர்த்துக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கலாம்.

வரித் திட்டமிடல்

வரித் திட்டமிடல்

பொறுப்புள்ள தந்தையாக இருப்பதில் உங்கள் வரிகளை புத்திசாலித்தனமாக திட்டமிடுவதும். அடங்கும். ஆயுள் காப்பீட்டு பிரீமியம்கள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவின் 80சி கீழ் (ஆண்டுக்கு ₹1.5 லட்சம் வரை) விலக்குகளுக்குத் தகுதி பெறுகின்றன. மேலும், உங்களுக்கு அகால மரணம் ஏற்பட்டு உங்கள் குடும்பம் பெறும் தொகைக்கு 10(10டி) பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும், இதற்கு காப்பீட்டுத் தொகை குறைந்தது பிரீமியத்தின் பத்து மடங்காக இருக்கவேண்டும் போன்ற சில நிபந்தனைகள் பூர்த்தியாவது அவசியம். இது போன்ற புத்திசாலித்தனமான வரித் திட்டமிடல் குடும்ப நிதிகளில் தந்தையின் பங்களிப்புக்கு மேலுமொரு அடுக்கைச் சேர்க்கிறது, இதில் ஒவ்வொரு முடிவும் பாதுகாப்பான எதிர்காலத்துக்குப் பங்களிக்கிறது.

காத்திருப்புக் காலம்

காத்திருப்புக் காலம்

சில பாலிசிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க குறுகிய காத்திருப்புக் காலம் (பொதுவாக இரண்டு ஆண்டுகள்) கொண்டுள்ள போதிலும், உங்கள் பாதுகாப்பு முழுமையாக நிறுத்தி வைக்கப்படாது. விபத்து காரணமாக ஏதாவது துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்தால், இந்தக் காத்திருப்புக் காலத்தில் கூட, உங்கள் குடும்பத்தினர் முழு காப்பீட்டுத் தொகையையும் பெறுவார்கள். அதுவே இயற்கை மரணமாக இருந்தால், குறைந்தபட்சம் நீங்கள் பிரீமியமாக செலுத்திய ஒவ்வொரு ரூபாயையும் அவர்கள் திரும்பப் பெறுவார்கள். இது உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கும் திட்டத்தை நேர்மையாக வைத்திருப்பதற்கும் இடையிலான சமநிலை. இந்தக் குறுகிய காலத்திலும் கூட, நீங்கள் அவர்களை வெறுங்கையுடன் விடுவதில்லை.

ஆயுள் காப்பீடு: நீடித்து நிலைக்கும் ஒரு பரிசு

ஆயுள் காப்பீடு: நீடித்து நிலைக்கும் ஒரு பரிசு

இந்த தந்தையர் தினத்தில், பாரம்பரியப் பரிசுகளுக்கு அப்பால், உங்கள் குடும்பத்திற்கு உண்மையிலேயே நீடிக்கும் ஒன்றைக் கொடுங்கள், அது நிதிப் பாதுகாப்பு. ஒரு தந்தை என்ற வகையில், உங்கள் ஆதரவே குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்கிறது. ஆயுள் காப்பீட்டால், நீங்கள் இல்லாதபோதும் அந்த ஆதரவு தொடர்கிறது. இது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு மாற்று வருமானத்தை, கடன் பாதுகாப்பை மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை வழங்குகிறது. அவரவருக்கு ஏற்ற காப்பீடு, வரிச் சலுகைகள், நெகிழ்வான பிரீமியம் தெரிவுகள் ஆகியவை இருப்பதால், உங்களைச் சார்ந்துள்ளவர்களைப் பாதுகாப்பதற்கு இது ஓர் அர்த்தமுள்ள வழி. எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் டெர்ம் பிளான் போன்ற ஒரு நம்பகமான திட்டம், உங்கள் குடும்பத்தாருக்கு உரிய முழு ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்கிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆயுள் காப்பீட்டில் நான்கு முக்கிய வகைகள் உள்ளன: கால காப்பீடு பண மதிப்பு இல்லாமல் தூய பாதுகாப்பை வழங்குகிறது. முழு ஆயுள் காப்பீடு வாழ்நாள் முழுவதும் காப்பீட்டை வழங்குகிறது. எண்டோவ்மென்ட் திட்டங்கள் சேமிப்பை காப்பீட்டு சலுகைகளுடன் இணைக்கின்றன. ULIPகள் (யூனிட்-லிங்க்டு இன்சூரன்ஸ் பிளான்கள்) சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீட்டு வாய்ப்புகளுடன் ஆயுள் காப்பீட்டு கவரேஜை வழங்குகின்றன, இதனால் அவை நீண்ட கால நிதி நோக்கங்களுக்கு ஏற்றதாக அமைகின்றன.

உங்கள் ஆண்டு வருமானத்தில் குறைந்தது 10 முதல் 15 மடங்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை நீங்கள் எடுக்க வேண்டும். உங்கள் குடும்பத்தின் எதிர்காலத் தேவைகள், தற்போதைய கடன்கள், குழந்தைகளின் கல்வி மற்றும் அன்றாடச் செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்.

நீங்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்போதுதான் ஆயுள் காப்பீட்டை வாங்க சிறந்த நேரம். பிரீமியங்கள் குறைவாக இருக்கும், மேலும் குறைவான மருத்துவ சிக்கல்களுடன் நீண்ட கால காப்பீட்டைப் பெறலாம். சீக்கிரமாகத் தொடங்குவது உங்கள் குடும்பம் ஆரம்பத்திலிருந்தே பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது, குறிப்பாக உங்களுக்கு நிதிப் பொறுப்புகள் இருந்தால் அல்லது உங்கள் வருமானத்தை நம்பி இருப்பவர்கள் இருந்தால்.

ஆம், நீங்கள் பாலிசி காலவரையிலிருந்து தப்பிப்பிழைத்தால் பணத்தைத் திரும்பப் பெறலாம், ஆனால் நீங்கள் பிரீமியம் திரும்பும் திட்டம், எண்டோவ்மென்ட் திட்டம் அல்லது பணத்தைத் திரும்பப் பெறும் கொள்கையைத் தேர்ந்தெடுத்திருந்தால் மட்டுமே.

பெரும்பாலான கால ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளில், பிரீமியம் பாலிசி காலம் முழுவதும் நிலையானதாக இருக்கும், இது செலவு நிலைத்தன்மையை வழங்குகிறது. இருப்பினும், புதுப்பிக்கத்தக்க காலத் திட்டங்கள் அல்லது அதிகரிக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற சில வகைகளில், பிரீமியம் காலப்போக்கில் அதிகரிக்கக்கூடும்.

மேலும் காண்க

சம்பந்தப்பட்ட கட்டுரைகள்