இந்த தந்தையர் தினத்தில் எஸ்பிஐ-இன் பாப்பாஹைநா பிரச்சாரம் மூலம் ஒரு மறக்கமுடியாத ‘MEMOREEL’ உருவாக்குவோம்
இந்த தந்தையர் தினத்தில் எஸ்பிஐ-இன் பாப்பாஹைநா பிரச்சாரம் மூலம் ஒரு மறக்கமுடியாத ‘MEMOREEL’ உருவாக்குவோம்
பாப்பாஹைநா பிரச்சாரம் இந்தியாவில் காப்பீடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் அடைவை மேம்படுத்த முனைகிறது.
நாம் அன்னையர் தினத்தை ஆர்வமாகவும் ஆனந்தமாகவும் கொண்டாடுகிறோம். ஆனால், ஒரு குழந்தையின் வாழ்வில் தந்தையின் பங்களிப்பைப் போற்றும் ஒரு முக்கியமான தினம் உள்ளது நமக்குத் தெரியுமா? அதுதான் தந்தையர் தினம்.
தந்தையர் தினத்தின் சரியான தேதி நாட்டுக்கு நாடு வேறுபடும். இந்தியாவில், இந்த தினம் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறு கொண்டாடப்படுகிறது, இம்முறை அது 21 ஜூன் 2020.
தந்தையர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
தந்தைமார்களும் தங்கள் குழந்தைகளுக்காக பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். இருப்பினும், அவை பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. குழந்தைகளின் வாழ்வில் தந்தைகளின் பங்களிப்பைப் போற்றி அவர்களுக்கு அன்பும் நன்றியும் காட்டவே தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் பொதுவாக பெரும்பங்கு ஆற்றுகிறார்கள். இருப்பினும், சிலவற்றுக்கு தந்தைகளையே குழந்தைகள் அதிகம் நாடுகிறார்கள். குழந்தைகள் பாதுகாப்புப் பெற தங்கள் தந்தையையே எதிர்பார்க்கிறார்கள். மேலும், தாய் இல்லத்தரசியாகவும் தந்தை மட்டுமே வருமானம் ஈட்டுபவராகவும் உள்ள குடும்பங்களில், அவரே முழு நிதிப் பொறுப்பையும் ஏற்கிறார். எனவே, குழந்தை வளர்ப்பு மட்டுமின்றி குழந்தைகளின் பொருளாதார நலமும் அவரது பொறுப்பாகிவிடுகிறது. குழந்தைகளின் கல்வி, கல்யாணம், இன்னபிற செலவுகளை அவரே கவனிக்கிறார். எனினும், அவருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் என்ன ஆகும்?
தந்தை குழந்தைகளின் வாழ்வில் பிரிக்கமுடியாத ஓர் அங்கம். அவரது திடீர் இழப்பு குழந்தைகளைப் பாதித்து அதிர்ச்சிக்கு ஆளாக்கலாம். அவர் மட்டுமே வருமானம் ஈட்டுபவராக இருந்திருந்தால், இது நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தலாம். எனவே, எதற்கும் தயாராக இருப்பது நல்லது. நீங்கள் ஒரு தந்தை எனில், உங்கள் குழந்தைகளுக்கு நிச்சயமற்ற எதிர்காலத்தை விட்டுச்செல்ல முடியாது. எனவே, அவர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்ய அவசியமான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும்.
உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைத் திட்டமிடும்போது கருத்தில்கொள்ள வேண்டிய ஓர் அத்தியாவசியத் தேவை, ஆயுள் காப்பீடு. நீங்கள் மறைந்தால் ஆயுள் காப்பீடு உங்கள் குழந்தைகளுக்கு நிதி ஆதரவு அளிக்கும். அவர்கள் இந்தத் தொகை மூலம் உங்கள் பாக்கிகளையும் கடன்களையும் அடைத்து நிதி நெருக்கடிக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்வர். மேலும், ஆயுள் காப்பீடு எடுத்தால், உங்கள் குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்க்கை உத்தரவாதம் அளித்துவிட்டீர் என்ற நிம்மதியோடு வாழலாம்.
இங்குதான் SBI-யின் #பாப்பாஹைநா பிரச்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது.
'பாப்பா ஹைநா' என்ற சொற்றொடர் குழந்தைகளுக்கு தந்தை மீதுள்ள நம்பிக்கையைக் குறிக்கிறது. குழந்தைகள் தங்கள் வாழ்வில் எல்லாவற்றுக்கும் எப்படித் தந்தையை நாடி உள்ளனர் என்பதை இது காட்டுகிறது. அவர்களுக்குத் தேவைப்படும் சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறீர் என்பதை உறுதிசெய்வதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம். குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஆயுள் காப்பீடு முக்கியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே #பாப்பாஹைநா பிரச்சாரத்தின் நோக்கம்.
தந்தைகள் ஊரடங்கு காலத்தில் தங்கள் குழந்தைகளுடன் கழித்த பசுமையான தருணங்களுக்கு ஒரு #பாப்பாஹைநாமெமோரீல் உருவாக்க இந்தப் பிரச்சாரம் உதவுகிறது. எங்கள் மைக்ரோ தளத்துக்குச் சென்று, ஊரடங்கு காலத்தில் உங்கள் குழந்தைகளுடன் கழித்த தருணங்களின் புகைப்படங்களைப் பதிவேற்றி உங்கள் விவரங்களை உள்ளிடுங்கள், அவ்வளவுதான்! எங்கள் மைக்ரோ தளம் ஒரு பெர்சனலைஸ்டுமியூசிகல் மெமோரீல் உருவாக்கும், அதை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னர் நீங்கள் #பாப்பாஹைநாமெமோரீல் ஆல்பத்தை குழந்தைகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்தப் பிரச்சாரம் இந்தியா முழுதும் உள்ள தந்தையர்களுக்கு தங்கள் குழந்தைகள் மீதான பொறுப்புகள் பற்றி படிப்படியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பிரச்சாரம் மென்மேலும் பிரபலம் அடைவதால் விழிப்புணர்வு அதிகரிக்கிறது, இதனால் அதிகமதிகமான தந்தைகள் ஆயுள் காப்பீடு மூலம் தங்களின் மற்றும் தங்கள் குழந்தைகளின் வாழ்வை உறுதிசெய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.