இந்தியாவில் சிறந்த வருமான வரி திட்டமிடலுக்கான குறிப்புகள்
உங்கள் வயதினருக்கு ஏற்ப ஜிடாக்ஸ் திட்டமிடல் குறிப்புகள்
நிதித் திட்டமிடலின் முக்கியமான காரணிகளில் ஒன்று வருமான வரி திட்டமிடல் ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் சம்பாதிக்கும் வருமானம் வரி விதிக்கக்கூடிய வரம்பை மீறினால், அதற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். வருமான வரிச் சட்டத்தின்படி, ரூ. 2.5 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் ஈட்டும் எந்தவொரு தனிநபரும் வரி விதிப்பின் வரம்பிற்குள் வருவார்.
எந்தவொரு தனிநபருக்கும் வரி திட்டமிடல் முக்கியமானது. நாம் வரி செலுத்துவது அரசாங்கம் பணத்தைச் சேகரித்து பல்வேறு அரசாங்கத் திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்த உதவுகிறது என்றாலும், அது வரி செலுத்துவோர் பெறும் பணத்தின் அளவையும் குறைக்கக்கூடும். எனவே இதைக் குறைக்க என்ன செய்ய முடியும்?
இதற்காக பல வரி திட்டமிடல் குறிப்புகளைப் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், இது ஒரு முறை மட்டுமே செய்யக்கூடியது அல்ல. வருமான வரித் திட்டமிடல் வாழ்க்கையில் சீராகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். நீங்கள் வாழ்க்கையிலும் தொழிலிலும் வளரும்போது உங்கள் வரி பொறுப்புகளும் அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் சில வரி திட்டமிடல் குறிப்புகள் இங்கே:
உங்கள் 20களில்
பொதுவாக, நீங்கள் வேலை செய்யத் தொடங்கும் 20களின் நடுப்பகுதி அல்லது பிற்பகுதியில் இருக்கும். நீங்கள் வரி விதிக்கக்கூடிய வருமானத்தைப் பெறவில்லை என்றாலும், வாழ்க்கையின் இந்தக் கட்டம் முதலீடு மற்றும் வரி திட்டமிடலைத் தொடங்குவதற்கு உகந்த நேரமாகும். எனவே நீங்கள் எங்கு தொடங்குவது?
சிறப்பாகச் சொல்வதானால், நீங்கள் சிறிய அளவில் தொடங்க வேண்டும். வரிப் பொறுப்பைக் குறைக்கும் அதே வேளையில், முதலீட்டிற்குத் துணைபுரியும் கருவிகளில் முதலீடு செய்வதே இதன் நோக்கமாகும். நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய சில முதலீட்டு கருவிகள் இங்கே:
- தயாரிப்பு: பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்)
விளக்கம்: பிபிஎஃப் மிகவும் பிரபலமான முதலீடாகவும் வரி சேமிப்பு வகைகளில் ஒன்றாகவும் உள்ளது. வட்டி விகிதம் 7.1% - 8% வரை இருக்கலாம், மேலும் இந்திய அரசு நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் விகிதங்களை மதிப்பாய்வு செய்கிறது. பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்வதன் நன்மைகளில் ஒன்று, முதலீட்டில் பெறப்படும் வட்டி வரிக்கு உட்பட்டது அல்ல. இருப்பினும், நீங்கள் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்ய முடிவு, 15 வருட லாக்-இன் காலம் உள்ளது என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
வரி சேமிப்பு: பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்வது, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்குகளைப் பெற உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகையைப் பெறலாம் என்றாலும், உங்கள் 20 வயதுகளில் சிறிய அளவில் தொடங்கலாம். முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச தொகை ரூ.500 ஆகும். - தயாரிப்பு: ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்
விளக்கம்: ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு உங்கள் 20 வயதும் ஒரு நல்ல நேரமாகும். இளமையாக இருப்பதால், காப்பீட்டுக்கு நீங்கள் செலுத்தும் பிரீமியம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும். இது ஒரு முக்கியமான முதலீட்டு கருவி மட்டுமல்ல, வரி சேமிப்பு கருவியும் கூட. ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் காத்திருப்பு காலம் உள்ளது.
வரி சேமிப்பு: ஒரு வரி செலுத்துபவராக, நீங்கள் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையில் செலுத்தும் பிரீமியத்திற்கு வரி விலக்கு கோரலாம். பிரிவு 80C இன் கீழ், நீங்கள் செலுத்தும் பிரீமியத்திற்கு ரூ.1.5 லட்சம் வரி விலக்கு கோரலாம். மேலும், பிரிவு 10(10D) இன் கீழ், செலுத்தப்பட்ட பிரீமியம் முதிர்வுத் தொகையில் 10% ஐ விட அதிகமாக இல்லாவிட்டால் மற்றும் அதன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட பிற நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், முதிர்வுத் தொகை வரி விலக்கு அளிக்கப்படும். - தயாரிப்பு: மருத்துவக் காப்பீடு
விளக்கம்: நீங்கள் 20 வயதுடையவராக இருந்தால், ஒரு மருத்துவக் காப்பீட்டுக் கொள்கையை வாங்குவது மிகவும் முக்கியம். எதிர்பாராத விதமாக மருத்துவ நெருக்கடி ஏற்படலாம், மேலும் அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம். மேலும், உங்களுக்கு வயதாகும்போது மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் அதிகரிக்கிறது. எனவே, மருத்துவக் காப்பீட்டில் முதலீடு செய்வதற்கு 20களில் சரியான நேரமாகும்.
வரி சேமிப்பு: உங்கள் மருத்துவக் காப்பீட்டில் நீங்கள் செலுத்தும் பிரீமியத்திற்கு பிரிவு 80D இன் கீழ் ரூ.25,000/- வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், உங்கள் பெற்றோருக்கான பிரீமியத்தை நீங்கள் செலுத்தினால், கூடுதல் விலக்குக்கு நீங்கள் தகுதியுடையவர் ஆவீர்.. உங்கள் பெற்றோர் மூத்த குடிமக்களாக இருந்தால், இந்த விலக்கு ரூ.50,000/- ஆக உயர்கிறது. - பொருள்: வீட்டு வாடகைப்படி
அ. நீங்கள் பெறும் உண்மையான எச்ஆர்ஏ (HRA)
ஆ. ஒரு பெருநகரத்தில் வசிப்பவராக இருந்தால், நீங்கள் சம்பளத்தில் 50% (அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி, பொருந்தினால்) கோரலாம்.
இ. நீங்கள் பெருநகரம் அல்லாத நகரத்தில் வசிக்கிறீர்கள் என்றால், சம்பளத்தில் 40% (அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி, பொருந்தினால்) கோரலாம்.
ஈ. உங்கள் ஆண்டு வருமானத்தில் 10% க்கும் அதிகமான வாடகையை நீங்கள் செலுத்தியிருந்தால் - விளக்கம்: வீட்டு வாடகைப்படி ஒரு பணியாளரின் சம்பள கட்டமைப்பின் ஒரு அங்கமாகும். இதற்கு வரி விதிக்கக்கூடிய வருமானத்திலிருந்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விலக்கு அளிக்கப்படலாம்.
வரி சேமிப்பு: எச்ஆர்ஏ வரி விலக்கு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10 (13A) இன் கீழ் வருகிறது. உங்கள் சம்பளத்தில் நீங்கள் எச்ஆர்ஏ பெற்றால், பொருந்தக்கூடிய நிபந்தனைகளின் கீழ் எச்ஆர்ஏ -க்கு வரி விலக்கு கோரலாம். - தயாரிப்பு: பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டம் (ELSS)
விளக்கம்: இஎல்எஸ்எஸ் இல் முதலீடு செய்வது உங்கள் வரிவிதிப்பு வருமானத்தில் விலக்கு பெற ஒரு சிறந்த வழியாகும். பிபிஎஃப் போன்ற பிற முதலீட்டு விருப்பங்களுடன் ஒப்பிடும்போது, இதற்கு லாக்-இன் காலம் 3 ஆண்டுகள் மட்டுமே.
வரி சேமிப்பு: பிரிவு 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம். - பொருள்: கல்விக் கடனுக்கான வட்டி
விளக்கம்: நீங்கள் கல்விக் கடனைப் பெற்று, கடனைத் திருப்பிச் செலுத்துபவராக இருந்தால், செலுத்தும் வட்டிக்கு வரி விலக்கு கோரலாம். இந்த நன்மையைப் பெற, கடனின் அசல் தொகை மற்றும் வட்டித் தொகையைப் பிரித்து நிதி நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதம் உங்களுக்குத் தேவைப்படும்.
வரி சேமிப்பு: நீங்கள் கோரக்கூடிய விலக்குக்கு வரம்பு இல்லை என்றாலும், நீங்கள் 8 ஆண்டுகளுக்கு அல்லது கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தும் வரை விலக்கு கோரலாம். இந்த வரி விலக்கை பிரிவு 80E இன் கீழ் கோரலாம்.
உங்கள் 30களில்
நீங்கள் 30 வயதுகளில் இருக்கும்போது, வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்ற யோசனை உங்களுக்கு இருக்கும். நீங்கள் உங்கள் தொழிலிலும் உயர்ந்திருக்கலாம், இதனால் நீங்கள் நடுத்தர பிரிவில் இருந்து உயர் வருமானப் பிரிவின் ஒரு பகுதியாக மாறலாம்.
உங்கள் கனவுகளும் இலக்குகளும் வடிவம் பெறத் தொடங்குகின்றன; இச்சமயத்தில்தான், நீண்டகால இலக்குகளை நிறைவேற்றுவது குறித்து நீங்கள் சிந்திக்கத் தொடங்குகிறீர்கள். பெரும்பாலான தனிநபர்கள் திருமணம் செய்துகொள்வதன் மூலம் தங்கள் குடும்பங்களை விரிவுபடுத்தவும் தேர்வு செய்கிறார்கள். இதன் பொருள் பொறுப்புகளின் அதிகரிப்பும் ஆகும். இவற்றில் ஒரு புதிய வீடு வாங்குவது, விரிவான காப்பீடு வாங்குவது, ஓய்வூதியத் திட்டமிடல் போன்றவை அடங்கும்.
- தயாரிப்பு: வீட்டுக் கடன்
விளக்கம்: நீங்கள் ஒரு வங்கி மூலம் கடன் பெற்று வீடு வாங்கியிருந்தால், அசல் தொகை மற்றும் செலுத்தப்பட்ட வட்டியை திருப்பிச் செலுத்துவதற்கு வரி விலக்கு கோரலாம்.
வரி சேமிப்பு: பிரிவு 80C இன் கீழ், அசல் தொகையில் நீங்கள் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு கோரலாம். பிரிவு 24B இன் கீழ் ரூ.2 லட்சம் கூடுதல் வரி விலக்கையும் பெறலாம். பிரிவு 80EEA இன் கீழ், நீங்கள் ரூ.1.5 லட்சம் வரை விலக்கையும் பெறலாம். இந்த விலக்குகள் வருமான வரி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. - தயாரிப்பு: ஆயுள் காப்பீடு
விளக்கம்: நீங்கள் உங்கள் 20 வயதில் ஆயுள் காப்பீட்டை வாங்கியிருந்தாலும், அதை அதிக மதிப்புக்கு மேம்படுத்தலாம், சேர்க்கலாம் அல்லது நாமினிகளை மாற்றலாம். ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளுக்கு செலுத்தப்படும் வருடாந்திர பிரீமியத்திற்கு ஒரு நிதியாண்டில் உங்கள் வருமானத்திலிருந்து கழிப்பதற்கு தகுதி பெறும்.
வரி சேமிப்பு: பிரிவு 80C இன் கீழ் நீங்கள் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு கோரலாம். - தயாரிப்பு: மருத்துவக் காப்பீடு
விளக்கம்: உங்கள் வாழ்க்கைத் துணைவர்கள், குழந்தைகள் அல்லது மூத்த குடிமக்களாக இருக்கும் பெற்றோர்கள் உட்பட உங்களைச் சார்ந்தவர்கள் இருந்தால், நீங்கள் அவர்களுக்காக சுகாதார காப்பீட்டை வாங்கி, பிரீமியத்தை வரி விலக்காகக் கோரலாம்.
வரி சேமிப்பு: நீங்கள் உங்களுக்காக வாங்கிய மருத்துவக் காப்பீட்டில் ரூ.25,000 வரி விலக்கு பெறுவதோடு, உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக வாங்கிய காப்பீட்டிற்கு கூடுதல் வரிச் சலுகைகளையும் கோரலாம். உங்கள் மனைவி அல்லது குழந்தைகளுக்கு விலக்காக ரூ.25,000/- பெறலாம்.
உங்கள் மூத்த குடிமக்கள் பெற்றோருக்கான சுகாதார காப்பீடு என்றால், நீங்கள் ரூ.50,000/- வரை வரி விலக்கு பெறலாம். பிரிவு 80D இன் கீழ், உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும், குழந்தைகளுக்கும், மூத்த குடிமக்களாக இருக்கும் பெற்றோருக்கும் ரூ.1 லட்சம் வரை விலக்கு கோரலாம். நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இது குழு காப்பீடாக இருக்கக்கூடாது. - விளக்கம்: நீங்கள் 30 வயதுடையவராக இருந்தால், ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்க இதுவே உகந்த நேரம். தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் இதைத் தொடங்கலாம். என்பிஎஸ் (NPS) இன் லாக்-இன் காலம் தனிநபர் 60 வயதை அடையும் வரை ஆகும். வரி சேமிப்பு: பிரிவு 80CCD இன் கீழ், என்பிஎஸ் இல் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் ரூ. 50,000/- வரி விலக்கு பெறலாம். இது பிரிவு 80C இன் கீழ் வருடத்திற்கு ரூ. 1.5 லட்சம் என்ற விலக்கு வரம்பிற்கு மேலானது ஆகும்.
உங்கள் 40களில்
இந்த கட்டத்தில், உங்கள் பொறுப்புகள் அதிகரித்திருக்கலாம். இருப்பினும், வரிகளைச் சேமிக்கும் அதே வேளையில், உங்கள் எதிர்காலத்தில் மிகவும் விடாமுயற்சியுடன் முதலீடு செய்ய வேண்டிய நேரம் இது. உதாரணமாக:
- தயாரிப்பு: வீட்டுக் கடன்
விளக்கம்: நீங்கள் ஒரு வங்கி மூலம் கடன் பெற்று வீடு வாங்கியிருந்தால், அசல் தொகை மற்றும் செலுத்தப்பட்ட வட்டியை திருப்பிச் செலுத்துவதற்கு வரி விலக்கு கோரலாம்.
வரி சேமிப்பு: பிரிவு 80C இன் கீழ், அசல் தொகையில் நீங்கள் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு கோரலாம். பிரிவு 24B இன் கீழ் ரூ.2 லட்சம் கூடுதல் வரி விலக்கையும் பெறலாம். பிரிவு 80EEA இன் கீழ், நீங்கள் ரூ.1.5 லட்சம் வரை விலக்கையும் பெறலாம். இந்த விலக்குகள் வருமான வரி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. - 1. குழந்தை கல்வி கடன்: உங்கள் குழந்தையின் உயர்கல்விக்காக நீங்கள் கடன் வாங்கியிருந்து, அக்கடனுக்கான வட்டித் தொகையைச் செலுத்துவதன் மூலம், பிரிவு 80E-இன் கீழ் வரி விலக்கு கோரலாம். இது 8 ஆண்டுகளுக்கு அல்லது கடன் முழுமையாக திருப்பிச் செலுத்தப்படும் வரை, எது முதலில் வருகிறதோ அதுவரை நீடிக்கும்.
- 2. நீண்டகால சேமிப்பு: எதிர்காலச் சேமிப்பையும் வரிச் சலுகைகளையும் வழங்கக்கூடிய முதலீட்டுக் கருவிகளில் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். வரிச் சேமிப்பு நிலையான வைப்புநிதிகள் (Tax-saving Fixed Deposits), 5 ஆண்டுகள் லாக்-இன் காலத்துடன், பிரிவு 80C-இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரையிலான வரி விலக்கை உங்களுக்கு வழங்கக்கூடும்
- 3. வீட்டுக் கடன்: பிரிவு 80C, 80EE, பிரிவு 80EEA மற்றும் பிரிவு 24B இன் கீழ் அசல் தொகை மற்றும் வட்டிக்கு வரி விலக்கு கோருவதைத் தொடரலாம்.
- ஓய்வுக்காலத் திட்டமிடல்: நீங்கள் என்பிஎஸ்-இல் முதலீடு செய்யவில்லை எனில், 'அடல் ஓய்வூதியத் திட்டத்தை' (Atal Pension Yojana) நீங்கள் பரிசீலிக்கலாம்; இத்திட்டத்தின் கீழ், பிரிவு 80CCD(1)-இன் படி, உங்கள் மொத்த வருமானத்தில் அதிகபட்சமாக 10% வரையிலும் (ரூபாய் 1.5 லட்சம் என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு) வரி விலக்கு பெற முடியும்
உங்கள் 50களில்
நீங்கள் 50களில் இருந்தால், உங்கள் ஓய்வு பெறும் வயதை நெருங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். இந்த நேரத்தில், வரி சேமிப்பில் மட்டும் கவனம் செலுத்துவதை விட சேமிப்பிற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம்.
உங்கள் மருத்துவக் காப்பீட்டை மறுஆய்வு செய்யுங்கள்: உங்களிடம் மருத்துவக் காப்பீடு இருந்தால், நீங்கள் செலுத்திய காப்பீட்டுக் கட்டணத்திற்கான வரி விலக்கைத் தவிர, தடுப்பு மருத்துவப் பரிசோதனைக்காக ரூ. 5,000-ஐக் கோரலாம்.
என்பிஎஸ் பங்களிப்பு: பிரிவு 80C-இன் கீழ் கோரப்படும் எந்தவொரு வரி விலக்கிற்கும் மேலாக, கூடுதலாக ரூ. 50,000 வரி விலக்கைப் பெற, உங்கள் என்பிஎஸ் பங்களிப்பைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.
ஒரு தனிநபருக்கான வரித் திட்டமிடல் எந்த வயதிலும் சாத்தியமாகும். அதிகபட்சப் பலன்களைப் பெறுவதற்கு, நீங்கள் நிதி சார்ந்த திட்டத்தையும், அந்த முதலீடுகள் மூலம் கோரக்கூடிய வரிச் சலுகைகளையும் கவனிக்க வேண்டும்.
கருத்துத்திருட்டை 13%-க்கும் கீழே குறைக்க முடியவில்லை
பொறுப்புத்துறப்பு:
இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள எங்கள் உள்ளடக்கம், வருமான வரிச் சட்டம், 1961 மற்றும் அதன் கீழ் வெளியிடப்பட்ட வருமான வரி விதிகள், 1962 ஆகியவற்றின்படி உள்ள நடைமுறை விதிகள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க அமைந்துள்ளது..வரிச் சட்டங்கள் அவ்வப்போது செய்யப்படும் திருத்தங்களுக்கு உட்பட்டவை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நன்மைகள் / வழிகாட்டுதல்கள் நிறுவனத்தின் கருத்து / பார்வையாகக் கருதப்படக்கூடாது. மேற்கூறிய கட்டுரையின் கீழ் பொருந்தக்கூடிய வரிச் சலுகைகள் / வழிகாட்டுதல் குறித்து உங்கள் தனிப்பட்ட வரி ஆலோசகரிடமிருந்து சுயாதீனமான பார்வையைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.