How Will The Coronavirus Impact Your Life Insurance
7 நிமிட வாசிப்பு
வாழ்க்கை காப்பீடு

கொரோனா வைரஸ் உங்கள் ஆயுள் காப்பீட்டை எவ்வாறு பாதிக்கும்

கொரோனா வைரஸ் உங்கள் ஆயுள் காப்பீட்டை எவ்வாறு பாதிக்கும்

கொரோனா வைரஸ் உங்கள் ஆயுள் காப்பீட்டை எவ்வாறு பாதிக்கும்

கோவிட்-19 தொற்றுநோய் நிதிச் சந்தைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அதிகரித்த உடல்நல அபாயங்கள் மற்றும் இறப்பு கிளைம்கள் காரணமாக ஆயுள் காப்பீட்டுத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகளில் கோவிட்-19 போன்ற ஒரு நோய் ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாததால், இந்த தொற்றுநோய் ஆயுள் காப்பீட்டுத் துறையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஏராளமான ஊகங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆயுள் காப்பீட்டின் முதன்மையான நோக்கம் உங்களுக்கு ஏதேனும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு ஏற்பட்டால், உங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் பாதுகாப்பை வழங்குவதாகும். இருப்பினும், கொரோனா வைரஸால் ஏற்படும் மரணம் ஆயுள் காப்பீட்டின் கீழ் வருமா என்பது குறித்து நிறைய ஊகங்கள் உள்ளன. அதிகம் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிக்கிறோம்.

கொரோனா வைரஸால் ஏற்படும் இறப்புகள் ஆயுள் காப்பீட்டின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளதா?

கொரோனா வைரஸால் ஏற்படும் இறப்புகள் ஆயுள் காப்பீட்டின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளதா?

ஏற்கனவே உள்ள உடல்நலக் குறைவால் ஏற்படும் மரணம் மற்றும் போதைப் பழக்கத்தால் ஏற்படும் மரணம் போன்ற சில இறப்புகள் ஆயுள் காப்பீட்டின் கீழ் வராது என்பது குறிப்பிடத்தக்கது. பாலிசிதாரரின் மரணம் குறிப்பிட்ட வகைகளின் கீழ் வந்தால் காப்பீட்டு நிறுவனம் காப்பீடு கிளைமை நிராகரிக்கும், மேலும் நியமனதாரர்களுக்கு ஆயுள் காப்பீடு பாலிசியின் பலன்கள் மறுக்கப்படும். இருப்பினும், கொரோனா வைரஸ் என்பது 'ஏற்கனவே உள்ள உடல்நலக் குறைவு' என்ற வரையறையின் கீழ் வராது. தற்போது ஆயுள் காப்பீடு பாலிசிதாரராக உள்ளவர் கொரோனா வைரஸால் இறந்துவிட்டால், பயனாளிகள் அல்லது நியமனதாரர்கள் இறப்பு இழப்பீட்டிற்குத் தகுதியுடையவர்கள். செல்லுபடியாகும் ஆயுள் காப்பீடு கிளைமைத் தாக்கல் செய்தவுடன், ஆயுள் காப்பீடு அல்லது டெர்ம் இன்சூரன்ஸ் பலன்கள் நியமனதாரருக்கு முறையாக வழங்கப்படும். எனவே, தற்போதைய ஆயுள் காப்பீடு பாலிசிதாரர்களின் நியமனதாரர்கள் ஆயுள் காப்பீட்டின் அனைத்துப் பலன்களையும் பெற முடியும். இருப்பினும் ஆயுள் காப்பீட்டைப் பொறுத்தவரை, அதன் காலம் காலாவதியாகியிருக்கக்கூடாது என்பதையும், கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் மரணம் அந்தக் காலத்திற்குள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அப்போதுதான் நியமனதாரர்களுக்கு ஆயுள் காப்பீடு பாலிசியின் பலன்களை வழங்க முடியும்.

தீவிர நோய் இழப்பீடு ரைடர் கோவிட்-19 ஐ உள்ளடக்குமா?

தீவிர நோய் இழப்பீடு ரைடர் கோவிட்-19 ஐ உள்ளடக்குமா?

மேலும் ஆயுள் காப்பீட்டில் தீவிர நோய் இழப்பீடு ரைடர் திட்டமும் உள்ளது, இதன்மூலம் பாலிசிதாரர் ஏதேனும் தீவிர நோயால் இறந்தால், நியமனதாரர்களுக்கு அதில் குறிப்பிட்டபடி கூடுதல் தொகை கிடைக்கும். தற்போதைய சூழ்நிலையில், கொரோனா வைரஸும் இந்த வகையின் கீழ் வர வருகிறது. இதன் விளைவாக, கொரோனா வைரஸால் ஏற்படும் மரணம் காரணமாக இறந்த பாலிசிதாரரின் நியமனதாரர்கள் இறப்பு இழப்பீட்டுடன் ஆட்-ஆன்களையும் பெறுவார்கள்.

இப்போது வாங்கப்பட்ட ஆயுள் காப்பீடு பாலிசி கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் மரணத்திற்கு காப்பீடு அளிக்குமா?

இப்போது வாங்கப்பட்ட ஆயுள் காப்பீடு பாலிசி கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் மரணத்திற்கு காப்பீடு அளிக்குமா?

இந்தத் தொற்றுநோய் காலத்தில் வாங்கப்பட்ட பாலிசி கோவிட்-19-ஐ உள்ளடக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது. வயது, பாலினம், மருத்துவ பதிவேடுகள் மற்றும் தொழில் போன்ற காரணிகளைக் காப்பீட்டு நிறுவனங்கள் கருத்தில் கொண்டு பிரீமியத்தின் அளவையும் ஆபத்தையும் மதிப்பிடுகின்றன. விண்ணப்பதாரருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்தால் காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டு விண்ணப்பத்தை அங்கீகரிக்கலாம். இருப்பினும், ஒரு நபர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனம் அவரது விண்ணப்பத்தை நிராகரிக்கும்.

இந்த உலகளாவிய நெருக்கடி ஒரு உண்மையை தெளிவுபடுத்தியுள்ளது, அதாவது - ஆயுள் காப்பீடு பாலிசியை வாங்கும் தொலைநோக்கு பார்வையைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் உங்கள் குடும்பத்தை இதுவரை இல்லாத மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்விலிருந்தும் பாதுகாக்க வேண்டும். ஆயுள் காப்பீட்டின் மூலம் கிடைக்கும் பலன்கள் ஒருவர் செலுத்தும் பிரீமியத்தின் விலையை விட மிக அதிகம்.

சம்பந்தப்பட்ட கட்டுரைகள்