Life after Covid - Banner Image
7 நிமிடங்கள் படித்தது
வாழ்க்கை யுக்திகள்

கோவிட்-19க்குப் பிறகு வாழ்க்கை எளிதாக இருக்கப் போவதில்லை

கோவிட்-19க்குப் பிறகு வாழ்க்கை எளிதாக இருக்கப் போவதில்லை

கோவிட்-19க்குப் பிறகு வாழ்க்கை எளிதாக இருக்கப் போவதில்லை

கொரோனா வைரஸ் தொற்றுநோய் நம் நாட்டை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. ஜூன் 22, 2020 நிலவரப்படி, இந்த நோய் சுமார் 13,700 இந்தியர்களின் உயிரைப் பறித்துள்ளது என்று சுகாதார மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வழங்கிய தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தினசரி இறப்பு எண்ணிக்கை குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகும், கொரோனாவுக்குப் பிறகு வாழ்க்கை எளிதாக இருக்கப் போவதில்லை. கோவிட்-19 நாம் எப்படி வாழ்கிறோம், வேலை செய்கிறோம் என்பதில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உறுதி.

இரண்டாவது அலை குறித்த பயம்

இரண்டாவது அலை குறித்த பயம்

பழைய முறைக்குத் திரும்புவது குறித்த மிகப்பெரிய அச்சங்களில் ஒன்று, சார்ஸ்-கோவ்-2 இன் இரண்டாவது அலை இருக்கலாம் என்பதுதான். இப் புதிய கொரோனா வைரஸானது எளிதில் தொற்றக்கூடியது. சராசரியாக, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் 2 முதல் 2.5 நபர்களுக்கு தொற்றை ஏற்படுத்துகிறார். மறுபுறம், பருவகால காய்ச்சல் சராசரியாக 0.9 முதல் 2.0 பேருக்கு தொற்று ஏற்படுகிறது. கூடுதலாக, தடுப்பூசி கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இருப்பதாகத் தெரிகிறது. சார்ஸ்-கோவ்-2 க்கான தடுப்பூசியை உருவாக்குவதற்கு குறைந்தது 18 மாதங்கள் தேவைப்படக்கூடும் என்று சிறந்த மதிப்பீடுகள் கணிக்கின்றன. மேலும் இந்த மதிப்பீடும் மிகவும் உத்தேசமானது தான். வைரஸ் நோய்களுக்கான தடுப்பூசிகளை உருவாக்க சுமார் 10 ஆண்டுகள் ஆகும்!

வைரஸின் அதிக தொற்றக்கூடிய தன்மை, தடுப்பூசி இல்லாதது ஆகியவை இணைந்து, வைரஸ் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது, குறிப்பாக கொரோனாவுக்குப் பிறகு, நம் வாழ்வில் சரியான சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகள் நாம் பின்பற்றப்படாவிட்டால். சீனா போன்ற உலகெங்கிலும் பல இடங்களில் இந்த நிகழ்வுகள் அதிகரிப்பதை நாம் காண்கிறோம். கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன், சீனாவின் சுற்றுலாத் தலங்களில் பெரும் கூட்டம் குவியத் தொடங்கியது. இதன் விளைவாக, கோவிட்-19 மீண்டும் அந்த நாட்டிற்கு வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத 58 நாட்களுக்குப் பிறகு, பெய்ஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி சந்தையில் 36 பேர் பாதிக்கப்பட்டனர். அதனுடன் கட்டுப்பாடுகளும் திரும்ப வந்துவிட்டன. உலகளவில் கோவிட்-19 தாக்கம் எவ்வளவு காலம் தொடரும் என்பது குறித்து பெரும் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.

கோவிட்-19 ஊரடங்கு அலைக்குப் பிறகு வாழ்க்கை

கோவிட்-19 ஊரடங்கு அலைக்குப் பிறகு வாழ்க்கை

ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு, வணிகங்கள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படும் விதம் கணிசமாக மாற வேண்டியிருக்கும். லாபம் குறைவாக இருக்கும், விஷயங்கள் மிகவும் சிக்கலானதாக இருக்கும், ஆனால் இவை அனைத்தும் இரண்டாவது அலையைத் தடுக்க அவசியமானவை. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு நம் வாழ்க்கையில் நாம் காணக்கூடிய சில மாற்றங்கள்:

1. ஷாப்பிங் மால்கள்

1. ஷாப்பிங் மால்கள்

பெரிய கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் மக்கள் கூட்டம் மற்றும் நுழைவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். சமூக இடைவெளி விதிமுறைகளை அமல்படுத்துவதை எளிதாக்கவும், வாடிக்கையாளர்களின் சுகாதாரத்தை உறுதி செய்யவும் இவை மேற்கொள்ளப்படும். முகக்கவசம் இல்லாமல் மக்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்படலாம். காசாளர்களும் கையுறைகள் மற்றும் முகக் கவசங்களை அணியுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள். சில கடைகள் நுழைவு வாயிலில் வெப்ப ஸ்கேனர்களை கூட வைக்கலாம். கூட்ட நெரிசலைத் தவிர்க்க வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு கூட வழங்கப்படலாம்.

2. விமானப் பயணம்

2. விமானப் பயணம்

விமானப் பயணமும் மாற உள்ளது. விமான நிறுவனங்கள் வாசிப்பு மெட்டீரியல்களை அகற்றவும், விமானங்களில் உணவு வழங்குவதை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளன. பயணிகள் விமானத்தில் முகக்கவசம் அணிய வேண்டும். கூடுதலாக, விமானங்களில் சமூக இடைவெளி தொடர்பான விதிகளும் இருக்கும். இந்த விதிமுறைகள் அனைத்தும் விமான நிறுவனங்களுக்கு செலவுகளை அதிகரிக்கக்கூடும்.

3. ஹோட்டல்கள்

3. ஹோட்டல்கள்

கோவிட்-19 ஆல் ஹோட்டல் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பணியாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அதாவது ஹோட்டல்களால் தங்கள் அனைத்து சேவைகளையும் வழங்க முடியாது என்று இதற்குப் பொருள்.

கோவிட்-19க்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றி நீங்கள் சிந்திக்கிறீர்கள் எனில், தடுப்பூசி உருவாக்கப்படும் வரை விஷயங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சம்பந்தப்பட்ட கட்டுரைகள்