வீட்டுக் கடன் பாதுகாப்பு உங்களுக்கு ஏன் தேவை என்பதற்கான 5 காரணங்களைக் கண்டறியுங்கள் | எஸ்பிஐ லைஃப்
வீட்டுக் கடன் பாதுகாப்பு உங்களுக்கு ஏன் தேவை என்பதற்கான 5 காரணங்களைக் கண்டறியுங்கள் | எஸ்பிஐ லைஃப்
வீட்டுக் கடன் பாதுகாப்புத் திட்டங்களைப் பொறுத்தவரை, பலருக்கு வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. சிலர், வீட்டுக் கடன் பாதுகாப்பை ஏற்கனவே உள்ள டெர்ம் இன்சூரன்ஸுடன் சேர்த்துக்கொள்ளலாம் என்று கருதுகின்றனர். வேறுசிலர், இதுபோன்ற திட்டங்களில் பெரும்பாலும் சாதகத்தை விட பாதகமே அதிகம் எனக் கூறுகின்றனர். வீட்டுக் கடன் பாதுகாப்புத் திட்டங்கள் டெர்ம் இன்சூரன்ஸ் போலவே செயல்படுகின்றன. கடன் வாங்கியவர் இறந்தால் இந்தக் காப்பீடு அவரது குடும்பத்தைப் பாதுகாக்கிறது. அப்போது குடும்பத்தினர் இந்தக் காப்பீட்டுத் தொகையை கோரிப் பெற்று பாக்கியுள்ள வீட்டுக் கடனை அடைத்துவிடலாம். கடனை அடைக்கும் காலம் வரை காப்பீடு உங்களைப் பாதுகாக்கும். நாம் ஏன் வீட்டுக் கடன் பாதுகாப்புத் திட்டங்களை வாங்க வேண்டும்? இத்தகு திட்டங்களின் பயன் என்ன? இதற்கான சில காரணங்களைப் பார்ப்போம் -
சொத்து மற்றும் பிற பிணையங்களைப் பாதுகாக்கிறது
கடன் வாங்கியவர் இறந்தால், கடன் பாக்கியை அடைக்க வீடு மற்றும் பிற மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். குடும்பத்தினர் எப்படியோ வீட்டைக் காப்பாற்றி விட்டாலும், உயர்மதிப்புள்ள வேறு உடமைகளை இழப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், வீட்டுக் கடன் பாதுகாப்புத் திட்டங்கள் கடன் பாக்கியை அடைத்து உடமைகளைக் காக்கும். எனவே, கடன் வாங்கியவர் இறந்தால் கூட, அது குடும்பத்தையோ அவர்களின் வாழ்க்கைத் தரத்தையோ பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறது.
சுலபமாகச் செலுத்தும் பிரீமியம்
வீட்டுக் கடன் பாதுகாப்புத் திட்டங்கள் டெர்ம் இன்சூரன்ஸ் போலவே செயல்படுகின்றன. ஒருமுறைப் பிரீமியத்தைச் செலுத்தி இந்தத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளலாம். கடன் வாங்குபவருக்கு பிரீமியம் தொகை கட்டுப்படியாகாத ஒன்றாக இருக்கலாம். அத்தகு சூழ்நிலையில், பிரீமியம் தொகை கடன் தொகையுடன் சேர்க்கப்பட்டு அது மாதாந்திர அல்லது காலாண்டு இஎம்ஐ மூலம் கழிக்கப்படும். உதாரணமாக, மொத்தக் கடன் தொகை ரூ. 25 லட்சம் மற்றும் ஒருமுறைப் பிரீமியம் ரூ.2 லட்சம் என வைத்துக்கொள்வோம். மொத்தக் கடன் தொகை ரூ.27 லட்சமாக மாறி, இஎம்ஐ மூலம் அது செலுத்தப்படும். இதன் மூலம் பிரீமியம் செலுத்துவது சுலபமாகும். திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து, ஒருமுறைப் பிரீமியம் செலுத்துபவர்களுக்கு சரண்டர் வசதி கிடைக்கலாம்.
வரிச் சலுகைகளும் மன அமைதியும்
வீட்டுக் கடன் பாதுகாப்புக் காப்பீட்டு பிரீமியத்துக்கு, 1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. எனினும், நீங்கள் பிரீமியம் தொகையையும் கடன் வாங்கி அந்தத் தொகை உங்கள் மாதாந்திர கடன் அடைப்பு இஎம்ஐ-யில் சேர்க்கப்பட்டிருந்தால் இது பொருந்தாது.
பேரழிவு ஒருபோதும் வரக்கூடாது என்று நீங்கள் விரும்பலாம், ஆனால் உங்களது மிக மதிப்புள்ள சொத்து, அதாவது உங்கள் வீடு, மிக மோசமான நெருக்கடி காலத்திலும் பாதுகாப்புப் பெற ஏற்பாடு செய்வது நிச்சயமாகப் பலனளிக்கும்.
வீட்டுக் கடனுடன் சேர்த்து வழங்கப்படுகிறது
சந்தையில் ஒரே மாதிரியான பல திட்டங்கள் இருப்பதால் வாங்குபவர் பெரும்பாலும் குழப்பமடைகிறார். வீட்டுக் கடன் பாதுகாப்பைப் பொறுத்தவரை, அது பொதுவாக வீட்டுக் கடனுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. கடன் வழங்கும் நிதி நிறுவனமே உங்களுக்கேற்ற பல்வேறு வீட்டுக் கடன் பாதுகாப்புத் திட்டங்களை வைத்திருப்பார்கள். இந்தத் திட்டங்களை அவர்களிடம் தான் வாங்க வேண்டும் என்பது கட்டாயமல்ல, இத்திட்டத்தை வீட்டுக் கடனுடன் சேர்த்தும் வாங்கலாம் அல்லது பின்னர் வேறு நிறுவனத்திடமும் வாங்கலாம். இதை முற்றிலும் நீங்களே முடிவுசெய்யலாம்!