Exploring Financial Instruments
10 நிமிடங்கள் படித்தது
நிதி

நிதிப் பத்திரங்களின் வகைகள் மற்றும் பயன்பாடுகள்

நிதிப் பத்திரம்

நிதிப் பத்திரம்

நிதிப் பத்திரங்கள் பற்றி புரிந்துகொள்வது உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதற்கு முக்கியம். நீங்கள் முதலீடு, சேமிப்பு போன்ற எதைச் செய்ய விரும்பினாலும் சரி, இந்தப் பத்திரங்கள் மூலம் உங்கள் நிதித் திட்டத்தில் அதிகபட்ச பலன் பெறலாம். செல்வத்தை வளர்ப்பதற்கான வழிகளை மென்மேலும் மக்கள் தேடும் நம் நாட்டில், நிதிப் பத்திரங்களின் பொருள், அவற்றின் வெவ்வேறு வகைகள், பயன்பாடுகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது முக்கியம்.

நிதி கருவி என்றால் என்ன?

நிதிப் பத்திரம் என்றால் என்ன?

சுருங்கச் சொன்னால், நிதிப் பத்திரம் என்பது பண மதிப்பைக் கொண்ட ஓர் ஒப்பந்தம். இவற்றில் பங்குகள், பத்திரங்கள் அல்லது காப்பீட்டுப் பாலிசிகளும் கூட அடங்கும். ஒவ்வொரு பத்திரமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு உதவுகிறது—சிலது பங்குச் சந்தையில் முதலீடு செய்ய உதவுகின்றன, மற்றவை உங்கள் பணம் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்கின்றன. இந்தியாவில் நிதிப் பத்திரங்கள் பரவலாகிவிட்டன, ஏனென்றால் மேலும் அதிகமான மக்கள் தங்கள் செல்வத்தை நிர்வகிக்க பாதுகாப்பான, திறமையான வழிகளைத் தேடுகிறார்கள். நிதிப் பத்திரங்களின் பொருளை அறிந்துகொள்வது சந்தையில் உங்களுக்கு ஒரு சாதகத்தை அளித்து, உங்கள் போர்ட்ஃபோலியோவை பலதரப்படுத்தி உங்கள் இலக்குகளை அடைய உதவும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் வகை மற்றும் அதுசார்ந்த இடரைப் பொறுத்து, நிதிப் பத்திரங்கள் பரந்த பல வகை வருமானங்களை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, சேமிப்புக் கணக்குகள் அல்லது நிலையான வைப்புத்தொகை போன்ற பணப் பத்திரங்கள் குறைந்த ஆனால் நிலையான வருமானத்தை வழங்குகின்றன, பொதுவாக ஆண்டுதோறும் சுமார் 3-6%. அரசு அல்லது கார்ப்பரேட் பத்திரங்கள் போன்ற கடன் சார்ந்த பத்திரங்கள், 6-10% வரை மிதமான வருமானத்தை வழங்க முடியும், அவை குறைந்தபட்ச இடர் கொண்டவை. மறுபுறம், பங்குகள் போன்ற பங்கு சார்ந்த பத்திரங்கள் அதிக இடர் கொண்டவை, ஆனால் நீண்ட காலத்திற்கு 12-15%க்கு மேல் லாபம் தரும். டெரிவேட்டிவ் மற்றும் அந்நியச் செலாவணிப் பத்திரங்கள், அதிக நிலையற்றவை என்றாலும், புத்திசாலித்தனமாக நிர்வகிக்கப்பட்டால் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டும், ஆனால் அவை அதிக இழப்புகளுக்கான சாத்தியம் கொண்டவை.

நிதி கருவிகளின் வகைகள்

நிதிப் பத்திரங்களின் வகைகள்

இந்தியாவில் பல்வேறு வகையான நிதிப் பத்திரங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் வெவ்வேறு நிதித் தேவைகளைப் பூர்த்திசெய்கிறது. நிதிப் பத்திரங்களின் பயன்பாடுகள் பெரும்பாலும் அவற்றின் அமைப்பு மற்றும் செயல்பாட்டைப் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. உங்கள் முதலீட்டுப் பயணத்தைத் தொடங்கும் முன் பல்வேறு வகையான நிதிப் பத்திரங்களை அறிந்துகொள்வது அவசியம், ஏனென்றால் அவை உங்கள் நிதிக் கல்வியின் ஒரு முக்கியப் பகுதியாகும்.

டெரிவேட்டிவ் பத்திரங்கள்

டெரிவேட்டிவ் பத்திரங்கள் என்பது வேறொரு சொத்தின் அடிப்படையில் மதிப்பு கொண்ட ஒப்பந்தங்கள். உதாரணமாக, ஒரு பங்கு அதன் மதிப்பை அடிப்படைப் பங்கு விலையிலிருந்து பெறுகிறது. இந்தியாவில், டெரிவேட்டிவ்கள் பொதுவாக பங்குச் சந்தையில் இடர்களைச் சமாளிக்க அல்லது விலை மாற்றங்களைக் கணிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பத்திரங்கள் அதிக வருமானத்தை வழங்க முடியும் அதேவேளை, அதிக இடர்களைக் கொண்டுள்ளன. ஃபியூச்சர்கள் மற்றும் ஆப்ஷன்கள் போன்ற டெரிவேட்டிவ்கள் அனுபவமுள்ள முதலீட்டாளர்களிடையே பிரபலமாக உள்ளன. நீங்கள் முதலீட்டுக்குப் புதியவராக இருந்தால், சாத்தியமான இழப்புகளைத் தவிர்க்க இந்த நிதிச் சந்தைப் பத்திரங்களைப் புரிந்துகொள்வது அவசியம்.

ரொக்கப் பத்திரங்கள்

ரொக்கப் பத்திரங்கள் மிகவும் நேரடியான நிதிப் பத்திரங்களாகும். அவற்றில் விரைவாக ரொக்கமாக மாற்றக்கூடிய நாணயப் பணம் அல்லது சொத்துக்கள் அடங்கும். சேமிப்புக் கணக்குகள், நிலையான வைப்புத்தொகை மற்றும் கருவூல பில்கள் இதில் அடங்கும். அதிக வருமானத்தை விட பணப்புழக்கம் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு ரொக்கப் பத்திரங்கள் சிறந்தவை. பல இந்தியர்களுக்கு, குறிப்பாக தங்கள் முதலீட்டுப் பயணத்தைத் தொடங்குபவர்களுக்கு, குறுகிய கால நிதி இலக்குகளைப் பெற ரொக்கப் பத்திரங்கள் மிகப் பாதுகாப்பான வழி. தேவைப்படும்போது உங்கள் பணத்தை எளிதாக அணுக முடியும் என்பதை அறிந்திருப்பதால், இந்தப் பத்திரங்கள் நிம்மதியை அளிக்கின்றன.

நிதிப் பத்திரங்களின் சொத்து வகைப்பாடுகள்

சொத்து வகைப்பாடுகளின் அடிப்படையிலும் நிதிப் பத்திரங்களை பிரிக்கலாம். இரண்டு பொதுவான வகைகள்: கடன் சார்ந்த பத்திரங்கள் மற்றும் பங்கு சார்ந்த பத்திரங்கள்.

கடன் சார்ந்தவை

கடன் சார்ந்த நிதிப் பத்திரங்கள் அடிப்படையில் கடன்களே. உதாரணமாக, நீங்கள் ஒரு பத்திரத்தை வாங்கும்போது, வட்டியை பெறுவதற்குப் பகரமாக அந்தப் பத்திரம் வழங்குனருக்கு பணக் கடன் கொடுக்கும் சூழ்நிலை. இந்தியாவில், அரசுப் பத்திரங்களும் கார்ப்பரேட் பத்திரங்களும் பிரபலமான கடன் சார்ந்த பத்திரங்களாகும். அவை பங்கு சார்ந்த பத்திரங்களுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பானவை எனக் கருதப்படுகின்றன, ஏனென்றால் அவை உத்தரவாதமான வருமானத்தை வழங்கி எச்சரிக்கையுள்ள முதலீட்டாளர்களுக்கு வசதியாக உள்ளன. கடன் சார்ந்த நிதிப் பத்திரங்களைப் புரிந்துகொள்வது சுலபம்: அவை இடர்களை இயன்றளவு குறைத்து நிலையான வட்டியை பெற்றுத் தருகின்றன.

பங்கு சார்ந்தவை

பங்கு சார்ந்த பத்திரங்களில் பங்குத் தொகுதிகள் மற்றும் பங்குகள் அடங்கும். நீங்கள் பங்குகளை வாங்கும்போது, ஒரு நிறுவனத்தில் உரிமையை வாங்குகிறீர்கள். பங்கு சார்ந்த நிதிச் சந்தைப் பத்திரங்கள் அதிக வருமானத்தைத் தரும் அதேவேளை, அதிக இடர்களையும் கொண்டுள்ளன. இந்தியாவில், பங்குச் சந்தைகள் கணிசமாக வளர்ந்துள்ளன, மற்றும் பல முதலீட்டாளர்கள் நீண்டகால செல்வ உற்பத்திக்காக பங்குகளில் முதலீடு செய்கிறார்கள். எனினும், பங்கு சார்ந்த பத்திரங்களில் இறங்கும் முன் அதிலுள்ள இடர்களைப் புரிந்துகொள்வது அவசியம்.

அந்நியச் செலாவணிப் பத்திரங்கள்

அந்நியச் செலாவணிப் பத்திரங்கள் நாணய வணிகம் சார்ந்தது. இந்தப் பத்திரங்கள் குறிப்பாக நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை வைத்து பயனடைய விரும்பும் வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடையே பிரபலமானவை. இந்தியாவில், அந்நியச் செலாவணி வர்த்தகம் மிகவும் அணுகக்கூடியதாக மாறியுள்ளது, எனவே பலர் இந்த உலகளாவியச் சந்தையில் பங்கேற்க முடிகிறது. அந்நியச் செலாவணிப் பிரிவில் உள்ள நிதிச் சந்தைப் பத்திரங்களுள் நாணய ஃபியூச்சர்கள் மற்றும் ஆப்ஷன்கள் அடங்கும். இந்தப் பத்திரங்கள் உங்கள் போர்ட்ஃபோலியோவை பலதரப்படுத்த உதவும், எனினும் அவற்றுக்கு உலகப் பொருளாதாரப் போக்குகளை கவனித்து வருவது அவசியம்.

நிதிப் பத்திரங்களின் முக்கியத்துவம்

நநிதிப் பத்திரங்களின் முக்கியத்துவம்

உங்கள் நிதி உத்தியை வடிவமைப்பதில் நிதிப் பத்திரங்கள் அதிமுக்கியப் பங்கு வகிக்கின்றன. உங்கள் செல்வத்தை வளர்ப்பது, எதிர்காலத்திற்காக சேமிப்பது அல்லது இடரைத் தணிப்பது என வெவ்வேறு நிதி இலக்குகளுக்கு ஏற்றவாறு அவை பல்வேறு தெரிவுகளை வழங்குகின்றன.

இந்திய முதலீட்டாளர்கள், நிலவும் நிதிப் பத்திரங்களின் வகைகளை அறிவதன் மூலம் மேலும் தெளிவான முடிவுகளை எடுக்கலாம். இந்தப் பத்திரங்கள், வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை வழங்கும் அதேவேளை, இடரைச் சமாளிப்பதற்கான கருவிகளும் கூட. பங்குச் சந்தை முதல் பத்திரங்கள் வரை, ஒவ்வொரு வகைப் பத்திரமும் உங்கள் ஒட்டுமொத்த நிதித் திட்டத்தில் ஒரு குறிக்கோளை நிறைவேற்றுகிறது.

காப்பீட்டுக் கொள்கைகள் நிதிக் கருவிகளா?

காப்பீட்டுப் பாலிசிகள் நிதிப் பத்திரங்களா?

ஆம், காப்பீட்டுப் பாலிசிகளும் நிதிப் பத்திரங்களாகக் கருதப்படுகின்றன. இந்தியாவில், காப்பீடு என்பது உங்கள் உயிர் அல்லது உடமைகளைக் காப்பது மட்டுமின்றி நிதிகளை நிர்வகிப்பதற்கான ஒரு திறனுள்ள கருவியும் கூட. எடுத்துக்காட்டாக, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் பாதுகாப்பு, சேமிப்பு ஆகிய இரு வசதிகளையும் அளிக்கும் பாலிசிகளை வழங்குகிறது. இத்தகு பாலிசிகள் ஒரு முதலீட்டு உபாயமாகச் செயல்படலாம், அவை ஆயுள் காப்பீடு வழங்குவதோடு நீண்டகால நிதித் தொகுப்பை உருவாக்கவும் உதவும். உங்கள் நிதி உத்தியில் காப்பீட்டைச் சேர்ப்பது பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என இரண்டிற்கும் ஒரு சமநிலையான அணுகுமுறையை வழங்கும். இது நிதிக்கு இடர் பாதுகாப்பை வளர்க்கவும் உதவும்.

காப்பீட்டுப் பாலிசி எடுக்காமல் இருப்பதற்கு கூறப்படும் காரணங்கள்

காப்பீட்டுப் பாலிசி எடுக்காமல் இருப்பதற்கு கூறப்படும் காரணங்கள்

காப்பீட்டுப் பாலிசிகள் மதிப்புள்ள நிதிப் பத்திரங்களே என்றாலும், பல இந்தியர்கள் அவற்றை வாங்கத் தயங்குகிறார்கள். சிலர் தங்களுடைய வயதில் காப்பீடு தேவையில்லை என்று நினைக்கிறார்கள், மற்றவர்கள் அது இல்லாமல் சமாளிக்க முடியும் என்று நம்புகிறார்கள். காப்பீட்டுப் பாலிசியை எடுக்காததற்கு விலையும் ஒரு காரணமாக பல சமயங்களில் கூறப்படுகிறது.

எனினும், இந்தக் காரணங்கள் நிதிப் பாதுகாப்பு மற்றும் செல்வச் சேர்ப்பு போன்ற பாலிசிதாரரின் நீண்டகாலப் பலன்களை கவனிப்பதில்லை. எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், இடருக்கும் லாபத்துக்கும் இடையே திறமையாகச் சமநிலை பேணும் வகையில் உதவ, கட்டுப்படியான திட்டங்களை வழங்குகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நிதி ஆவணத்தை மோசடி செய்வது என்பது மற்றொரு தரப்பினரை ஏமாற்றுவதற்காக ஒரு நிதி ஆவணத்தை சட்டவிரோதமாக மாற்றுவது அல்லது போலியாக உருவாக்குவதைக் குறிக்கிறது. இதில் மோசடி செய்வதற்கான காசோலை, பத்திரம் அல்லது பிற ஆவணங்களை பொய்யாக்குவது அடங்கும். பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கு முன்பு எச்சரிக்கையாக இருப்பதும், எந்தவொரு நிதி ஆவணத்தின் நம்பகத்தன்மையையும் சரிபார்ப்பதும் முக்கியம்.

சர்வதேச நிதிச் சாதனங்கள் என்பது உலகளாவிய சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படும் ஒப்பந்தங்கள் அல்லது பத்திரங்கள் ஆகும். இந்த சாதனங்களில் வெளிநாட்டுப் பத்திரங்கள், சர்வதேச பங்குகள் மற்றும் நாணயப் பரிமாற்றங்கள் ஆகியவை அடங்கும். இந்திய முதலீட்டாளர்களுக்கு, சர்வதேச நிதிச் சாதனங்கள் உள்நாட்டுச் சந்தையைத் தாண்டி வேறு எங்கும் செல்ல வாய்ப்பளிக்கின்றன. இருப்பினும், அவை நாணய ஏற்ற இறக்கங்கள் மற்றும் ஒழுங்குமுறை வேறுபாடுகள் போன்ற கூடுதல் அபாயங்களுடன் வருகின்றன.

A: செல்வத்தை வளர்ப்பதற்கும், சேமிப்பைப் பாதுகாப்பதற்கும், குவிப்பதற்கும், அதே போல் ஆபத்தை வர்த்தகம் செய்வதற்கும் அவற்றின் திறன் மூலம், நிதிக் கருவிகள் உங்கள் நிதி நோக்கங்களை பூர்த்தி செய்ய முதலீடு, சேமிப்பு அல்லது அபாயங்களைக் கையாள்வதில் உங்களுக்கு உதவ முடியும்.

A: நிதிக் கருவிகளின் முக்கிய அம்சங்களில் அத்தகைய கருவிகளின் தரப்படுத்தல், ஈவுத்தொகை வடிவில் அவற்றின் வருமானத்தை வழங்குதல் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட சந்தை அடிப்படையிலான ஆபத்து ஆகியவை அடங்கும்.

A: உங்கள் இலக்குகள் பயன்படுத்த சிறந்த நிதி கருவியை தீர்மானிக்கும்: நிலையான வைப்புத்தொகை மற்றும் பத்திரங்கள் (பாதுகாப்பு), பங்குகள் (வளர்ச்சி) மற்றும் பரஸ்பர நிதிகள் (ஆபத்து மற்றும் வெகுமதி கவனம் இடையே சமநிலை).

அனைத்தையும் காண்க

சம்பந்தப்பட்ட கட்டுரைகள்